samedi 6 juillet 2019

சித்திர கவிமேடை - 4


சித்திர கவிமேடை - 4
  
சங்குச் சித்திர கவிதை
  
குன்றுறுங் கோகுலத்துச் சீர்த்தேனே! விண்ணரசே!
என்றுறும் பொன்னருளே! வா..திருவே! - அன்புறுந்பே
ரிங்கேந்தும் கன்னல்மிகும் வந்தொளிர் வாழ்வேந்தச்
சங்கேந்தும் கண்ணனே தாங்கு!
  
78 எழுத்துக்களைக் கொண்டிருக்கும் இவ்வெண்பா சித்திரத்தில் 73 எழுத்துக்களைப் பெற்றிருக்கும். ஒன்றாக வரும் எழுத்துக்கள் [1-78] [5-77] [16-75] [30-34] [56-69]
  
விரும்பிய பொருளில் சங்குச் சித்திர கவிதை ஒன்று பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
  
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து தங்கள் சங்குச் சித்திர கவிதையைப் பதிவிட வேண்டுகிறேன்!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
06.07.2019

Aucun commentaire:

Enregistrer un commentaire