mercredi 14 octobre 2020

பாவலர்மணி


 வணக்கம்
  
பாவலர் பயிலரங்கம் நடத்தும் விருத்தம் ஆயிரம் எழுதும் கவிவளப் பயிற்சியில் முதலிடத்தில் வெற்றிபெற்ற பாவலர் இராம. வேல்முருகன் அவர்களுக்குப் பாவலர்மணி பட்டம் வழங்குகிறோம்.
  
நல்ல மனமுடையார்! நற்றமிழ்ப் பற்றுடையார்!
வல்ல கவிதை வளமுடையார்! - தொல்லுலகில்
சீர்ப்பா வலர்மணியார்! செவ்வேல் முருகனார்!
சேர்ப்பார் புகழைத் தினம்!
  
பாவலர்மணி பட்டம் பெற்ற இராம. வேல்முருகன் அவர்களுக்குப் பாவலர் பயிலரங்கம் சார்பாக வெண்பா மாலை சாத்த விரும்புகிறேன். பாவலர் பயிலரங்க உறவுகள் ஓர் வெண்பா பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
பாலவர் பயிலரங்கம் பிரான்சு
15.10.2020

Aucun commentaire:

Enregistrer un commentaire