samedi 17 octobre 2020

வெண்பா மேடை - 193

 

கொற்கையான் மாறன் குலசே கரப்பெருமான்

பொற்கையான் ஆனகதை போதாதோ? - நற்கமல

மன்றலே வாரி மணிவா சலையசைக்கத்

தென்றலே ஏன்வந்தாய் செப்பு?

 

[கம்பன் தனிப்பாடல்கள்]

போலித் துறவியரும், பொல்லாத ஆட்சியரும்,

கூலிக் கொலையரும், கொள்ளையரும், - கேலியரும்,

மன்றிலே ஆடுகிறார்! மானம் தனையிழந்து

தென்றலே ஏன்வந்தாய் செப்பு?

 

[பாட்டரசர் கி. பாரதிதாசன்]

 

"தென்றலே ஏன்வந்தாய் செப்பு" ஈற்றடி அமையும் வண்ணம் நேரிசை வெண்பா ஒன்று பாடுக.

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

தலைவர்

கம்பன் கழகம் பிரான்சு

தொல்காப்பியர் கழகம் பிரான்சு

17.10.2020

Aucun commentaire:

Enregistrer un commentaire