vendredi 9 octobre 2020

வெண்பா மேடை - 192


 வெண்பா மேடை - 192
    
வில்லம்பும் சொல்லம்பும் மேதகவே யானாலும்
வில்லம்பில் சொல்லம்பே வீறுடைத்து! - வில்லம்பு
பட்டிருவிற் றென்னை,என் பாட்டம்பு நின்குலத்தைச்
சுட்டெரிக்கும் என்றே துணி!
    
[கம்பன் தனிப்பாடல்கள்]
  
முன்வினை என்ன? முடியாச் சுமையென்ன?
பின்வினை என்ன? பெரும்பாவத் - துன்பென்ன?
கட்டுடைக்கும் நோயென்ன? கண்ணன் திருவடிகள்
சுட்டெரிக்கும் என்றே துணி!
    
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
"சுட்டெரிக்கும் என்றே துணி" ஈற்றடி அமையும் வண்ணம் நேரிசை வெண்பா ஒன்று பாடுக.
    
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழக

Aucun commentaire:

Enregistrer un commentaire