dimanche 10 mai 2020

கண்ணன் காப்பு

கண்ணன் காப்பு



இறையருளும் குருவருளும் இதயங் கொண்டேன்!
   எல்லோரும் ஏத்துகின்ற ஏற்றங் கண்டேன்!
நிறையருளும் தமிழ்த்தாயை நெஞ்சம் உற்றேன்!
   நீடுபுகழ் மணக்கின்ற நிலையைக் கற்றேன்!
மறையருளும் சீராய்ந்து வாய்மை போற்றி
   மதியருளும் நன்னெறியால் வளமே பெற்றேன்!
குறைதிரளும் போக்கின்றிக் கோலக் கண்ணன்
   குணமருளும் திருவடியே இந்நுால் காப்பு!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
09.05.2020



1 commentaire: