dimanche 22 décembre 2013

தாய்மண்ணே வணக்கம்!




தாய்மண்ணே வணக்கம்

எடுப்பு

புதுவை மண்ணே வணக்கம் - தமிழ்ப்
புலமை உன்பால் மணக்கும்!
                                (புதுவை)

தொடுப்பு

மதுவைப் போன்றே மயக்கும் - உன்
மடியில் பிறக்கும் தமிழின் இயக்கம்!
                                (புதுவை)

முடிப்பு

பாரதி பாடிய பைந்தமிழ்த் தோட்டம் - சந்தப்
பண்மலர் சூடிய பாவலர் கூட்டம்!
பாரதி தாசனின் படையொளிர் கோட்டம் - எப்
பக்கமும் பாட்டுடன் பார்க்கலாம் ஆட்டம்!
                                (புதுவை)

இலக்கண இலக்கியம் பூத்திடும் காடு - என்றும்
இணையிலாச் செந்தமிழ் வாழ்ந்திடும் வீடு!
கலைமணம் கமழ்ந்திடும் காவிய ஏடு! - ஈடில்
கவிமணம் பரவிடும் குறள்மணத் தோடு!
                                (புதுவை)

சீருடைக் கம்பனைச் செப்பும்நற் புதுவை - தமிழ்க்
கூருடைப் புலவர்கள் குவிந்திடும் புதுவை!
பேருடைச் செயல்களால் பீடுறும் புதுவை - தமிழ்
வேருடைப் புகழ்தனில் மேலுறும் புதுவை!
                                (புதுவை)

12.05.2012

7 commentaires:

  1. வணக்கம்
    ஐயா

    காலைப்பொழுதில் மனதுக்கு விருந்தாக அழகிய கவிதை அருமை வாழ்த்துக்கள் ஐயா.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
  2. வணக்கம்
    ஐயா.

    த.ம 5வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
  3. புதுவையின் புதுமை
    போற்றிடும் எண்ணம்
    பூத்திடும் இலக்கணம்
    பொருந்திடல் பெருமையே

    நன்றி தொடர வாழ்த்துக்கள்...!

    RépondreSupprimer
  4. வணக்கம் !
    புதுவையின் அழகினைப்
    பொலிவினைப் போற்றிடும்
    கவிஞனின் உள்ளம்
    வாழிய வாழிய வாழியவே ....

    RépondreSupprimer
  5. சிறந்த பாவண்ணம்

    RépondreSupprimer
  6. மிக அருமை ஐயா...!
    த.ம. +1

    RépondreSupprimer