vendredi 25 novembre 2022

கலிவிருத்தம் - 17


 

கலிவிருத்தம் - 17

விளம் + விளம் + விளம் + மா

 

மல்லொடு மலைமலைத் தோளரை வளைவாய்ப்

பல்லொடும் நெடுங்கரப் பகட்டொடும் பருந்தாள்

வில்லொடும் அயிலொடும் விறலொடும் விளிக்கும்

சொல்லொடும் உயிரொடும் நிலத்தொடும் துகைத்தான்

[கம்பன், சுந்தர. சம்புமாலிவதைப் படலம் - 32]

 

கடமையை ஊக்கிடும் கதிரினைத் துதித்தேன்!  

மடமையைத் தாக்கிடும் மதியினை விளைத்தேன்!  

கொடுமையை நீக்கிடும் குணத்தினைப் பதித்தேன்!

கடுமையைப் போக்கிடும் களத்தினைப் படைத்தேன்!  

[பாட்டரசர்]

 

கலிவிருத்தம் ஓரடியில் நான்கு சீர்களைப் பெறும். நான்கடிகள் ஓரெதுகையில் அமையும். ஒன்று மூன்றாம் சீர்களில் மோனை வரும்.

 

விளம் + விளம் + விளம் + மா என்ற வாய்பாட்டில் விரும்பிய தலைப்பில் கலிவிருத்தம் ஒன்று இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம், பிரான்சு
25.11.2022

 

 

Aucun commentaire:

Enregistrer un commentaire