வெண்பா மேடை - 218
ஈற்றடியும் எனைய அடிகளும் எழுத்து ஒத்து வருவது சமநடை வெண்பா. ஈற்றடி எழுத்து மிக்கு, ஏனைய அடிகளின் எழுத்துக் குறைந்து ஒவ்வாது வருவது மயூர வெண்பா. எழுத்தெண்ணிகையில் புள்ளியும் ஆய்தமும், குற்றுகரமும் நீக்கிக் கணக்கிட வேண்டும்.
கனிந்து கமழ்ந்து கவிதை பொழிந்து - 9
நினைந்து நினைந்து நெகிழ்ந்து - தினமும் - 9
வழியைத் தடுத்து வகுத்து வதைத்து - 9
விழியிரண்டுங் கொல்லுமெனை மீட்டு! - 10
[பாட்டரசர்]
மேலுள்ள வெண்பாவில் ஈற்றடி 10 எழுத்துக்களைப் பெற்று, முதல் மூன்றடிகள் எழுத்து குறைந்து வந்தன.
'மயூர இயல் வெண்பா' ஒன்று எழுதுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
பாலவர் பயிலரங்கம் பிரான்சு
10.04.2022

Aucun commentaire:
Enregistrer un commentaire