samedi 25 avril 2020

கேட்டலும் கிளத்தலும்


கேட்டலும் கிளத்தலும்
  
விநாயகன் - வினாயகன் இவற்றில் எது சரியா?
  
இளமதி, செர்மனி
--------------------------------------------------------------------------------------------------------------------
  
விநாயகன் என்ற சொல் சமற்கிருதம். நாயகன் என்றால் தலைவன் என்று பொருள். விநாயகன் என்றால் தனக்குமேல் ஒரு தலைவன் இல்லாதவன் என்று பொருள். நாயகன் சொல்லில் தந்நகரமே முதலில் உள்ளது. ஆகையால் விநாயகன் என்பதிலும் அதையே இட்டு எழுதவேண்டும். வடமொழியில் னகரம் இல்லை. அது தமிழுக்குச் சிறப்பெழுத்தாகும். திநம், சிநேகன், அந்நியன் ஆகிய சொற்களைத் - தினம், சினேகன், அன்னியன் என இருசுழி னகரம் இட்டு எழுதவேண்டும்.
  
விநாயகன் - பிள்ளையார், தகையிறை, அறிவன், கலுழன், குரு
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
25.04.2020

1 commentaire: