mardi 21 avril 2020

ஐகான் இல்லா வெண்பா



வெண்பா மேடை - 177
    
ஐகான் இல்லா வெண்பா
    
ஐகார எழுத்தே இன்றிப் பாடப்படுவது 'ஐகான் இல்லா வெண்பா' எனப்படும்.
    
வண்ணம் வளருதடி! எண்ணம் மலருதடி!
பண்ணும் படருதடி பாமகளே! - நண்ணும்
உணர்வுகளால் உள்ளம் உருகுதடி! காதல்
கனவுகளால் பூக்குதடி கண்!
    
இவ்வாறு அமையும் 'ஐகான் இல்லா வெண்பா' ஒன்று பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
    
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
21.04.2020

2 commentaires: