dimanche 4 août 2019

இரத பந்தம்



தேர் ஓவியக் கவிதை - 13
    
இயலிசைப்புலவர்
இராச. வேங்கடசனார் வாழியவே!
  
மதுப்பூத்த வேயேதான் மார்புரையாம்! நாவை
நதிவனத்துத் தேன்சேரும்! நன்றாய் - விதுப்பும்
நயமதும்..சீர் நன்கிசைக்கும்! மெல்லிசைத் துாயர்!
இயலிசை வேந்தரை யேத்து!
  
கருத்துரை:
  
புதுவை இயலிசைப்புலவர் இராச. வேங்கடேசனார் நெஞ்சமளிக்கும் உரைகள் இனிக்கும் வேய்ங்குழல் இசையைப்போன்றிருக்கும். அவரின் திருநாவைப் பாய்ந்தோடும் ஆற்றுவளமுடைய சோலைதரும் தேன் சேரும். [தேன்போல் அவர் சொற்கள் இனிக்கும்] நன்றாய் அவரின் ஆசைகள் நமக்கு நன்மைகளை மிக்களிக்கும். சிந்து, சந்தம் ஆகிய மெல்லிசை பொழிகின்ற துாயவர். இயலிசை மன்னவர். அவரை ஏத்திப் போற்றுகவே.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
03.08.2019

Aucun commentaire:

Enregistrer un commentaire