mercredi 22 mai 2013

இன்பம் வீசுமே




இன்பம் வீசுமே


கண்ணும் கண்ணும் பேசுமே - பூங்
காற்றாய் இன்பம் வீசுமே!
எண்ணம் எண்ணம் சேருமே - மன
ஏக்கம் எல்லாம் தீருமே!

இரவும் பகலும் இனிக்குமே - நம்
இளமைச் சூட்டைத் தணிக்குமே!
கரமும் கரமும் இணையுமே - மனம்
களிப்பாம் மழையில் நனையுமே!

கனவும் நினைவும் வளருமே - தேன்
கவிதை தினமும் மலருமே!
மனமும் மனமும் மயங்குமே - ஏதும்
வார்த்தை இன்றித் தயங்குமே!

15.05.1985           

7 commentaires:

  1. இரவும் பகலும் இனிக்குமே - நம்
    இளமைச் சூட்டைத் தணிக்குமே!//உண்மைதான் அய்யா இன்னுமா?

    RépondreSupprimer
  2. தேன் கவிதை தினமும் மலருமே!

    பாராட்டுக்கள்...

    RépondreSupprimer
  3. இனிமையான வரிகளும் எங்களை ரசிக்க வைக்குமே...

    வாழ்த்துக்கள் ஐயா...

    RépondreSupprimer
  4. என்றும் பேசும் எங்கள் தமிழ்தான்
    நின்று நிலைத்து நினைவில் தோன்றும்
    குன்றும் சிலிர்க்க கூறும் பாக்கள்
    இன்றும் உள்ளதே இனிதாய்தானே...

    த ம 4

    RépondreSupprimer
  5. 15.05.1985 அன்று எழுதிய கவிதையா?

    RépondreSupprimer