வெண்பா மேடை - 209
ஒரு வெண்பா ஐந்து தனிச்சொல்
1.
வாடிமனம் நிற்காமல் வண்ண மலர்க்காவில்
ஓடிமனம் சுற்றும்! உயர்தமிழே! - பாடிமனம்
கண்டு களிக்கக் கமழும் கவியமுதை
மொண்டு குடிக்க முழங்கு!
2.
வாடிமனம் நிற்காமல் வண்ண மலர்க்காவில்
ஓடிமனம் சுற்றும்! உயர்தமிழே! - ஆடிமனம்
கண்டு களிக்கக் கமழும் கவியமுதை
மொண்டு குடிக்க முழங்கு!
3.
வாடிமனம் நிற்காமல் வண்ண மலர்க்காவில்
ஓடிமனம் சுற்றும்! உயர்தமிழே! - கூடிமனம்
கண்டு களிக்கக் கமழும் கவியமுதை
மொண்டு குடிக்க முழங்கு!
4.
வாடிமனம் நிற்காமல் வண்ண மலர்க்காவில்
ஓடிமனம் சுற்றும்! உயர்தமிழே! - கோடிமனம்
கண்டு களிக்கக் கமழும் கவியமுதை
மொண்டு குடிக்க முழங்கு!
5.
வாடிமனம் நிற்காமல் வண்ண மலர்க்காவில்
ஓடிமனம் சுற்றும்! உயர்தமிழே! - நாடிமனம்
கண்டு களிக்கக் கமழும் கவியமுதை
மொண்டு குடிக்க முழங்கு!
ஒரு வெண்பாவில் தனிச்சொல் மட்டும் மாறி ஐந்து வெண்பாக்கள் அமையவேண்டும். மேலுள்ள வெண்பாக்களில் பாடிமனம், ஆடிமனம், கூடிமனம், கோடிமனம், நாடிமனம் எனத் தனிச்சொற்கள் வந்துள்ளன.
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
12.08.2021

Aucun commentaire:
Enregistrer un commentaire