lundi 18 novembre 2013

தேன் கிண்ணம்




தேன் கிண்ணம்

தூங்காத நெஞ்சம் உண்டு - காதல்
துயர்களை வாழ்வில் கொண்டு!
தாங்காத போதை மொண்டு - மனம்
தவிக்குதே இவளைக் கண்டு!

உன்னிறம் மலரின் வண்ணம் - நடை
உன்னிடம் பயிலும் அன்னம்!
பொன்னிறம் மின்னும் கன்னம் -அது
போதையைத் தரும்தேன் கிண்ணம!;

நினைவுகள் நாளும் பெருகும் - என்
நெஞ்சமும் உன்னால் உருகும்!
கனவுகள் உயிரைப் பருகும் - இன்பக்
களிப்பினில் உள்ளம் சொருகும்!

15 commentaires:

  1. வணக்கம்
    ஐயா

    தூங்காத நெஞ்சம் உண்டு - காதல்
    துயர்களை வாழ்வில் கொண்டு!
    தாங்காத போதை மொண்டு - மனம்
    தவிக்குதே இவளைக் கண்டு!
    தேன்கிண்ணத்தில் காதல்ச்சுவை ஊறுகிறது..ஐயா.. அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
  2. தேன் கிண்ணத்தில் வீழ்ந்த
    வண்டாகிச் சொக்கிப் போனேன்
    மீண்டும் மீண்டும் படித்து மகிழ்ந்தேன்
    பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த
    நல்வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
  3. களிப்பினில்
    உள்ளம்
    உருகுதய்யா

    RépondreSupprimer
  4. ஆகா...! ரசித்தேன் ஐயா... வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer
  5. தேன் கிண்ணம் போலே - இனிய
    தித்திக்கும் கவிதை கண்டு
    மான்விழி யுடையாள் மருள்வாள் - இளமை
    மயக்கம் நெஞ்சில் தருவாள்

    அருமை அருமை
    வாழ்த்துக்கள் கவிஞரே
    வாழ்கவளமுடன்

    RépondreSupprimer
  6. அட.. டா.. அருமை!
    எங்கே கவிஞரின் காதல் கவிதைகளைக் காணோமே
    என்று நினைத்திருந்தேன்..
    நான் நினைக்க நீங்களும் இங்கே பாடிவிட்டீர்களே.:)

    அழகும் அசத்தலும் உங்கள் கவிதை கவிஞரே!
    வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
  7. இப்படியெல்லாம் எழுத நமக்கு அனுமதி கொடுக்கமாட்டார்கள் நண்பரே!

    RépondreSupprimer
  8. காதல் தரும் இன்பம்
    சாதல் இன்றியே நீளும்...

    அருமைக் கவிதை! நன்றி ஐயா!

    RépondreSupprimer
  9. "பொன்னிறம் மின்னும் கன்னம் -அது
    போதையைத் தரும்தேன் கிண்ணம!" என
    அழகான கற்பனை வீச்சில்
    படிக்கப் படிக்கப் பா சுவைக்கிறதே!

    RépondreSupprimer
  10. அழகிய சந்தக் கவிதையாயுள்ளது ஐயா.

    ஆழ்ந்து ரசிக்கவைத்த சீர்களின் அமைப்பு.
    நல்ல இசைப் பாடல். அருமை!

    என் பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும் ஐயா!

    RépondreSupprimer
  11. வணக்கம் ஐயா...

    மனதை ஈர்க்கிறது உங்கள் கவிதை!
    சந்தங்கள் அற்புதமாக இருக்கின்றன.

    அருமை! தொடர்ந்து இதுபோல் வேறு வேறு கவிதைகள் தாருங்கள்.
    அவைதான் எனக்குக் கற்றுக்கொள்ள மிக உதவியாக இருக்கின்றன.

    நானும் முயன்றேன்...

    தருகிறீர் தினமொரு பாடல்! - நம்
    தமிழிவள் காண்பது ஆடல்!
    உருகிடும் சீர்களின் கூடல்! - அதை
    உணர்ந்திடத் தூண்டுதே தேடல்!

    என் பணிவான வணக்கமும் வாழ்த்துகளும் ஐயா!

    * வெளிவிடத் தக்கதாக இல்லையாயின் தவிர்திடுங்கள்.
    மிக்க நன்றி ஐயா!
    உங்கள் தரவை வைத்து தருகிறேன் ஒரு பாடல்.

    RépondreSupprimer
  12. தூங்காத கண் ஒன்று உண்டு.
    துடிக்கின்ற சுகம் ஒன்று உண்டு

    உங்க கவிதையை இந்த மேட்டில் கூட பாடலாம்!
    தமிழ்மணம் பிளஸ் +1

    RépondreSupprimer

  13. மான்,மயில் கன்னல் மதுவகை அத்தனையும்
    தேன்கிண்ணப் பாட்டின்முன் திண்டாடும்! - நான்என்ன
    சொல்ல? சுடா்க்கவியே! துாயவுன் பாக்களை
    மெல்லப் படிப்பேன் மிதந்து!

    RépondreSupprimer
  14. மனதை அப்படியே சொக்க வைக்கும் வரிகள், எனது வணக்கங்களும் பாராட்டுக்களும்.

    RépondreSupprimer