samedi 11 avril 2020

பத்துச்சொல் எழிலணி வெண்பா!


வெண்பா மேடை - 165
  
பத்துச்சொல் எழிலணி வெண்பா!
  
பத்து வினாக்களுக்கு ஒரு விடை வரும்படியாகப் பாடுவது பத்துச்சொல் எழிலணி வெண்பாவாகும்.
  
பொய்யுரையும், சேர்தளையும், புண்ணோயும், நல்வன்மை
மெய்யுரையும், சேர்வினையும், மேவரணும், - உய்விடமும்
மூடுதலும், பந்தியும், மூட்டையும்,காண் பேரென்ன?
கூடுதலும் 'கட்டு'எனக் கூறு!
  
வெண்பாவில் வந்த பத்து வினாக்களுக்குக் 'கட்டு' என்ற ஒரு விடை வந்தது.
  
1. பொய்யுரை - பொய்யாகக் கதையைக் கட்டிச் சொல்லுதல்
2. தளை - இணைத்தல், சேர்தல் [கட்டுதல்]
3. நோய் - பிணி [கட்டு]
4. வன்மை மெய்யுரை - உடவுறுதி [ உடற்கட்டு]
5. சேர்வினை - தழுவுதல், மணஞ்செய்தல், [கட்டி அணைத்தல்]
6. மேவு அரண் - அணை, காவல் [கட்டு]
7. உய்விடம் - வீட்டின் பகுதி [ சமையற்கட்டு]
8. மூடுதல் - கடையைக் கட்டு
9. பந்தி - ஒழுங்கு [கட்டுப்பாடு]
10. மூட்டை - கட்டு
  
இவ்வாறு பத்துச்சொல் எழிலணி வெண்பா ஒன்று பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
11.04.2020

Aucun commentaire:

Enregistrer un commentaire