jeudi 2 avril 2020

முச்சொல் எழிலணி வெண்பா


வெண்பா மேடை - 161
  
முச்சொல் எழிலணி வெண்பா
  
மூன்று வினாக்களுக்கு ஒரு விடை வரும்படியாகப் பாடுவது முச்சொல் எழிலணி வெண்பாவாகும்.
  
கடல்மேல் வருவதெது? கற்கும் கவியைச்
சுடர்போல் தருவதெது? துன்பத் - தொடர்போக்க
மேகலை கொண்டதெது? விந்தைக் 'கலம்'என்பேன்
மாமலைக் கோவே மகிழ்ந்து!
  
கலம்: ஓடம், யாப்பருங்கலம், உண்கலம்
  
மேலுள்ள வெண்பாவில் உள்ள மூன்று வினாக்களுக்குக் 'கலம்' என்ற ஒரு விடை வந்தது. இவ்வாறு முச்சொல் எழிலணி வெண்பா ஒன்று பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
02.04.2020

Aucun commentaire:

Enregistrer un commentaire