lundi 13 avril 2020

கேட்டலும் கிளத்தலும்


கேட்டலும் கிளத்தலும்
  
பழனி, பழநி எது சரியானது?
  
பாவலர் தென்றல், சென்னை.
  
---------------------------------------------------------------------------------------------------------------------------
  
பழனி என்ற சொல்லே சரியானது. இவ்வூரைப் பொதினி என்றும் [பொன்னுடை நெடுநகர்ப் பொதினி - அகநானுாறு - 61] ஆவிநன்குடி என்றும் [ஆவி நன்குடி அசைதலும் உரியன் - திருமுருகாற்றுப்படை - 176] இலக்கியங்களில் காண்கிறோம்.
  
பொதினி என்ற பெயர் பழனி என்று மருவியிருக்க வேண்டும். பொதினியில் உள்ள றன்னகரமே அப்பெயருக்குரியது. மாம்பழக் கதையை அடிப்படையாகக் கொண்டு, முருகனைப் 'பழம் நீ' என்று அழைத்ததால் பழநி என்று எழுதுகின்றனர். பழனி என்பதே இலக்கிய வழக்கென முனைவர் இரா. திருமுருகனார் உரைக்கின்றார். [இலக்கணம் இனிக்கிறது பக்கம் 82]
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் - பிரான்சு
தொல்காப்பியர் கழகம் - பிரான்சு
13.02.2020.

1 commentaire:

  1. தெளிவான இலக்கண விளக்கம் ஐயா

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும்
    இனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்

    RépondreSupprimer