samedi 11 avril 2020

எட்டுச்சொல் எழிலணி வெண்பா



வெண்பா மேடை - 164
  
எட்டுச்சொல் எழிலணி வெண்பா
  
எட்டு வினாக்களுக்கு ஒரு விடை வரும்படியாகப் பாடுவது எட்டுச்சொல் எழிலணி வெண்பாவாகும்.
  
பொங்குலையும் பொன்புடமும் பூதியும் ஓங்கவதேன்?
சங்கொலியும் வேயிசையும் புண்தழலும் - இங்குறும்
மெய்வினையென்? சூடணைய மாட விளக்கணையச்
செய்வினையென்? ஊதுதல் தீர்ப்பு!
  
மேலுள்ள வெண்பாவில் எட்டு வினாக்களுக்குக் 'ஊதுதல்' என்ற ஒரு விடை வந்தது. ஊதுதலால் அடுப்பு எரிகிறது, பொன்புடம் ஏற்கிறது, பூதி [பலுான்] காற்றை ஏற்கிறது. வெண்சங்கை ஊதுதலால் பேரொலி கேட்கிறது. வேய்ங்குழலை ஊதுதலால் இன்னிசை கமழ்கிறது. தழற்புண் வலியை வாயால் ஊதிப் துயர்குறைப்பார். கொதிக்கின்ற தேநீரை, வெந்நீரை ஊதி ஊதிக் குடிப்பார். மாடத்தில் எரிகின்ற விளக்கை வாயால் ஊதுவதாலும் அணையும்.
  
இவ்வாறு எட்டுச்சொல் எழிலணி வெண்பா ஒன்று பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
11.04.2020

Aucun commentaire:

Enregistrer un commentaire