வெண்பா மேடை - 177
ஐகான் இல்லா வெண்பா
ஐகார எழுத்தே இன்றிப் பாடப்படுவது 'ஐகான் இல்லா வெண்பா' எனப்படும்.
வண்ணம் வளருதடி! எண்ணம் மலருதடி!
பண்ணும் படருதடி பாமகளே! - நண்ணும்
உணர்வுகளால் உள்ளம் உருகுதடி! காதல்
கனவுகளால் பூக்குதடி கண்!
இவ்வாறு அமையும் 'ஐகான் இல்லா வெண்பா' ஒன்று பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
21.04.2020

அருமை ஐயா...
RépondreSupprimerநலமாக கவனமாக இருங்கள் ஐயா...
RépondreSupprimer