jeudi 8 août 2019

மலர்ப்பந்தம்



மலர் ஓவியக் கவிதை
  
வேலா யிடு பாவே!
வேதா தடு நோவே!
வேடா கொடு பூவே!
வேரா இரு நாவே!
  
கருத்துரை:
  
வேலவனே நற்பாக்களைத் தருவாய். என் மன நோயைத் தடுப்பாய். மணமுள்ள பூக்களைக் கொடுப்பாய். தாங்கும் வேராக என்னுடைய நாவில் நிலைத்து நிற்பாய்.
  
ஓரடிக்கு 6 எழுத்துக்கள் வரவேண்டும். முதல் எழுத்தும் ஈற்றெழுத்தும் ஒன்றி வரவேண்டும்

பாட்டரசர் கி. பாரதிதாசன்
08.08.2019

Aucun commentaire:

Enregistrer un commentaire