lundi 5 août 2019

இரதபந்தம்



தேர் ஓவியக் கவிதை 14
  
புதுவைப் புலவர்
சந்தப்பாமணி அரங்க. நடராசனார் வாழியவே!
  
கட்டளைக் கலித்துறை
  
உளமோங்கி வாழும் பெருமை! அருளளி வேல்வடிவ
நலமோங்கி வாழும் புலமை!..வல் வேய வெழிற்சுவைவாய்!
குளமேந்து பூநட ராசர்முத் தாளு முயரணியர்!
வளமோங்கி வாழுங் கவிதை புவிவார்த்து வாழியவே!
  
கருத்துரை:
  
புதுவைப் புலவர், சந்தப்பாமணி அரங்க. நடராசனாரின் உள்ளத்துள் பெருமை நிலையாக வாழும். நுால்களில் நலமோங்கி வாழும் கூரிய புலமையுடையவர். வல்ல வேய்ங்குழல் இசைபோல் இனிக்கும் திருவாயைப் பெற்றவர். குளம்பூத்த தாமரைபோல் அழகுடைய வாழ்வைப் பெற்றவர். முத்துப்போல் வெண்மை அணியர். வளமோங்கி வாழும் கவிதைகளைப் புவிக்களித்து வாழியவே!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
04.08.2019

Aucun commentaire:

Enregistrer un commentaire