mercredi 8 novembre 2023

பாவலர்மணி நகுலா சிவநாதன்

 


வணக்கம்

.

பாவலர் பயிலரங்கம் நடத்தும் விருத்தம் ஆயிரம் எழுதும் கவிவளப் பயிற்சியில் முதலிடத்தில் வெற்றி பெற்ற பாவலர் நகுலா சிவநாதன் அவர்களுக்குப் பாவலர்மணி பட்டம் வழங்குகிறோம்.

.

சீர்மைச் செந்தமிழின் செய்யுள் கலைபயின்று

கூர்மை விருத்தம் குவித்தார்! - நேர்மையுடை

நற்பா மணியார் நகுலா சிவநாதர்

பொற்பாப் புலமையால் பூத்து!

.

பாவலர்மணி பட்டம் பெற்ற நகுலா நவநாதன் அவர்களுக்குப் பாவலர் பயிலரங்கம் சார்பாக வெண்பா மாலை சாத்த விரும்புகிறேன்.  பாவலர் பயிலரங்க உறவுகள் ஓர் வெண்பா பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

.

பாட்டரசர் கி. பாரதிதாசன்

கம்பன் கழகம் பிரான்சு

தொல்காப்பியர் கழகம் பிரான்சு

பாலவர் பயிலரங்கம்  பிரான்சு

08.11.2023

 

Aucun commentaire:

Enregistrer un commentaire