dimanche 12 novembre 2023

பாவலர்மணி திருமகள்


 

வணக்கம்

.

பாவலர் பயிலரங்கம் நடத்தும் விருத்தம் ஆயிரம் எழுதும் கவிவளப் பயிற்சியில் முதலிடத்தில் வெற்றி பெற்ற பாவலர் திருமகள் [உரூபா அன்ரன்] அவர்களுக்குப் பாவலர்மணி பட்டம் வழங்குகிறோம்.

.

விந்தைத் தமிழால் விருத்தங்கள் ஆயிரம்

சிந்தை செழித்திடவே செப்பினார்! - முந்துபுகழ்

பெற்றார்! பெருமைகளைப் பேணித் திருமகளார்

கற்றார் கவிதைக் கலை!

.

பாவலர்மணி பட்டம் பெற்ற திருமகள் [உரூபா அன்ரன்] அவர்களுக்குப் பாவலர் பயிலரங்கம் சார்பாக வெண்பா மாலை சாத்த விரும்புகிறேன்.  பாவலர் பயிலரங்க உறவுகள் ஓர் வெண்பா பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

.

பாட்டரசர் கி. பாரதிதாசன்

கம்பன் கழகம் பிரான்சு

தொல்காப்பியர் கழகம் பிரான்சு

பாலவர் பயிலரங்கம்  பிரான்சு

12.11.2023

Aucun commentaire:

Enregistrer un commentaire