jeudi 16 janvier 2020

காணும் பொங்கல்


திருவள்ளுவர் ஆண்டு 2051 தைத்திங்கள் 3
17.01.2020

 
கருணை பொங்கி மணம்வீசும்
   காணும் பொங்கல் வாழியவே!
அருணைத் தேவன் திருவருளால்
   அன்பும் அறிவும் மலருகவே!
சுருணை உலகம் சுடர்த்தமிழின்
   துாய நெறியைச் சூடுகவே!
வருணை அழகே! மலர்ப்பெண்ணே!
   வாழ்வே இனிக்கப் பொங்குகவே!
  
ஏழை எளியோர் இன்பமுற
   இனிக்கும் இந்நாள் வாழியவே!
வாழை தென்னைத் தோப்பாக
   வளமே எங்குஞ் சேருகவே!
யாழை மீட்டித் தமிழுணர்வை
   ஏந்தும் பாக்கள் பாடுகவே!
தாழை மணமே! தமிழ்மகளே!
   தவமே! பொங்கல் பொங்குகவே!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்,
கம்பன் கழகம், பிரான்சு,
தொல்காப்பியர் கழகம், பிரான்சு.

1 commentaire: