samedi 18 mai 2019

சிலேடை வெண்பா


சிலேடை வெண்பா
  
வினைத்தொகையும் ஊழ்வினையும்
  
முக்காலம் மூட்டுவதால், முந்திவினை தீட்டுவதால்,
எக்காலம் எந்தமிழ் ஏற்றுவதால் - தொக்குவதால்,
சேர்ந்து வருவதனால் சீரார் வினைத்தொகையும்
ஓர்ந்து பழவினையும் ஒப்பு!
  
வினைத்தொகை
  
காலம் காட்டும், வினைகொள்ளும், தமிழிலக்கண நுால்கள் எடுத்துரைக்கும். கால இடைநிலை மறைந்துவரும். இரு சொற்கள் சேர்ந்து வரும்.
  
ஊழ்வினை
  
முக்காலத்திலும் செய்த வினை சூழும். முந்திவந்து வாட்டும். தமிழிலக்கிய நுால்கள் எடுத்துரைக்கும் [ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும்] அறிய முடியாவண்ணம் மறைந்திருக்கும். செய்த வினையெல்லாம் சேர்ந்து தாக்கும்.
  
ஆராய்ந்து பார்த்தால் சீருடைய தமிழிலக்கணம் சொல்லும் வினைத்தொகைக்கு ஊழ்வினை ஒப்பாகும்.
    
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
17.05.2019

Aucun commentaire:

Enregistrer un commentaire