lundi 5 novembre 2012

பழுத்த கனியே! தாகூரே!





பழுத்த கனியே! தாகூரே!

எங்கள் தந்தை பெரியார்போல்
     ஏற்கும் அஞ்சா(து) இருந்தனையே!
மங்கும் எளியோர் வாழ்க்கையினை
     மகிழும் வண்ணம் உயர்த்தினையே!
பொங்கும் புதுமைக் கருத்தினையும்
     பூந்தேன் பொழியும் அன்பினையும்
வங்க மொழியில் நூலாக
     வடித்துப் புகழைப் பெற்றனையே!

தடுக்கப் பட்டோர் நிமிர்ந்திடவும்
     தாழ்த்த பட்டோர் மீண்டிடவும்
ஒடுக்கப் பட்டோர் ஓங்கிடவும்
     உழலும் துன்பம் நீங்கிடவும்
எழுதப் பட்ட உம்கவியை
     இனிதே போற்றி வணங்குகிறேன்!
பழுத்த கனியே! தாகூரே!
     பண்பின் ஒளியே! வாழியவே!

  15.05.2002

2 commentaires: