samedi 5 janvier 2019

காலை வெண்பா


திருவள்ளுவர் ஆண்டு 2049 மார்கழி 21
05.01.2019
  
சோலை மணக்கட்டும் சொல்லும் கவிதைக்குள்!
மாலை மணக்கட்டும் வன்மனத்துள்! - காலையெழும்
வானம் மணக்கட்டும்! வாழ்விக்கும் வண்டமிழே!
ஞானம் மணக்கட்டும் நன்கு!
  
சௌமியன் தந்திட்ட தண்டமிழ் நன்னுாலை
நேமியன் நல்லருளால் நெஞ்சுறவே, - பூமியில்
உன்னினம் ஓங்கி உயர்ந்திடவே, ஒண்டமிழே!
பொன்னினப் பாக்கள் பொழி!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்

Aucun commentaire:

Enregistrer un commentaire