lundi 23 décembre 2019

காலை வெண்பா


இனிய வணக்கம்!
  
திருவள்ளுவர் ஆண்டு 2049 மார்கழி 8
24.12.2019
  
தாயே! தவச்சுடரே! உன்னழகைச் சாற்றுமென்
வாயே மணக்கும் வளத்துடனே! - சேயே..நான்
ஓங்கக்கண் காட்டு! உயர்தமிழே! நற்புகழைத்
தாங்கப்பண் கூட்டு தழைத்து!
  
தித்திக்கும் செம்மொழியே! சித்திக்கும் தென்மொழியே!
எத்திக்கும் உன்போல் இனிப்பில்லை! - புத்திக்குள்
சூழும் சுடர்த்தமிழே! தொன்மொழியே! உன்னடியில்
ஆழும் அடியேன் அகம்!
  
தீட்டும் கவியாவும் மூட்டும் எழுச்சியை!
நாட்டும் இனத்தின் நலக்கொடியை! - காட்டும்
கமிழ்நெறியை! கன்னல் கனித்தமிழே! காப்பேன்
சமநெறியை அன்பே தழைத்து!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
நிறுவுநர்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு

1 commentaire: