vendredi 13 décembre 2019

மூவின வெண்பா - 2


வெண்பா மேடை - 151   
மூவின வெண்பா - 2
  
காதல் நலங்கூட்டும்! யாழின் களிப்பூட்டும்!
நாத வகைநாட்டும்! கண்கமழும் - மாதவமாய்
விந்தைச் சுவையூட்டும்! நற்கவிதை வாழ்வோங்கச்
சிந்தை மரபூட்டும் வார்த்து!
  
வெண்பாவின் முதல் சீர் தொடக்கம் வல்லினத்திலும், இரண்டாம் சீர் தொடக்கம் மெல்லினத்திலும், மூன்றாம் சீர் தொடக்கம் இடையினத்திலும், இவ்வாறே மாறி மாறி ஈற்றுச்சீர்வரை அமையவேண்டும்.
  
விரும்பிய பொருளில் 'மூவின வெண்பா' ஒன்றைப் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன். "பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து வெண்பாவைத் தனிப்பதிவாகப் பதிவிடுக.
  
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
நிறுவுநர்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
13.12.2019


1 commentaire: