mardi 25 décembre 2012

கிறித்துப் பிறந்தநாள் வாழ்த்து!



கிறித்துப் பிறந்தநாள் வாழ்த்து!


ஆடுக! பாடுக! ஆனந்த இன்னிசையைச்
சூடுக! துாய மலரடியைக் - கூடுக!
பொன்மன யேசு புவியில் பிறந்தநாள்!
என்மனம் வாழ்த்தும் இனித்து!

உலகே மகிழ்வெய்த ஒண்குடில் வந்த
நிலவே! நிறைஞான தேவே! - மலரே!என்
நெஞ்ச நினைவுகளில் நீங்கா திருந்தென்றும்
கொஞ்சும் கவிகள் கொடு


5 commentaires:

  1. ஏசுவின பிறந்த நாள் வெண்பா மனம் கவர்ந்தது.

    RépondreSupprimer
  2. கிறித்து பிறந்தநாள் வாழ்த்து!

    RépondreSupprimer
  3. மிகவும் அருமையான பதிவு சகோ நன்றி

    RépondreSupprimer
  4. ''...நெஞ்ச நினைவுகளில் நீங்கா திருந்தென்றும்
    கொஞ்சும் கவிகள் கொடு...'''
    கொஞ்சும் கவிகள் கொடுக்கட்டும்.
    வரிகள் நன்று...நன்று!
    சுவைத்தேன்.
    இறையருள் பெருகட்டும்.
    வேதா. இலங்காதிலகம்.

    RépondreSupprimer
  5. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer