lundi 25 novembre 2019

மாலைச் சித்திர கவிதை

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.
மாலை ஓவியக்கவிதை
  
உயிரின் வலிமை
[நேரிசைச் சிந்தியல் வெண்பா]
  
குலமே கனிய நலமே தருக!
நிலமே கனிய நிறைக - புலனே!
பணிமுறை தானே பலம்!
  
குலம் - இனம்
புலன் - அறிவு
பணிமுறை - செயலொழுக்கம்
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
25.11.2019

dimanche 24 novembre 2019

மாலை மாற்று சிலுவை ஓவியக்கவிதை


மாலை மாற்று சிலுவை ஓவியக்கவிதை
  
வாழ்கதிர் வேணி யதி!மல்மகா வாகே!நா
வாழ்காழே! யானே தமனேகாண்! கானே
மதனே!யா ழே!காழ்..வா! நாகே..வா! கா..மல்
மதியணி வேர்திகழ் வா!
  
அருஞ்சொற்பொருள்

வேணி - வானம்
அதி - அதிகம்
மல் - வளம்
வாகு - அழகு
நா - பொலிவு
காழ் - ஒளி, முத்து
தமன் - வேலையாள்
கான் - பூ
மதன் - அழகு
நாகு - இளமை
கா - சோலை
  
கருத்துரை
  
இறைவனின் அழகைப் போற்றியும், தன்னை இறைவனின் வேலையாளாகவும், காக்க வரவேண்டுமென்றும் வெண்பா உரைக்கிறது.
  
நிலையாக இருக்கின்ற கதிர் வானே. மிகுவளமான பெருமையுடைய பேரழகே. பொலிவாக ஆழ்கின்ற ஒளியே. யான் உன்னுடைய வேலையாள் காண்க. பூவழகனே, யாழிசைபோல் இனிப்பவனே, முத்தே, வாராய். இளமையாய் ஒளிர்பவனே வாராய். சோலைபோல் வளமுடைய அறிவணிவேர் திகழ வாராய்!
  
இவ்வெண்பா 53 எழுத்துக்களைப் பெற்று மாலை மாற்றாகச் சிலுவையில் வந்துள்ளது. சிலுவையின் அடியில் இடப்பக்கத்தில் தொடங்கி மேலேறிச் சுற்றி வலப்பக்கத்தில் வெண்பா முடிவதுபோல், வலப்பக்கத்தில் தொடங்கி மேலேறிச் சுற்றி இடப்பக்கத்திலும் முடியும். வலப்பக்கத்திலும், இடப்பக்கத்திலும் எழுத்துக்கள் ஒன்றி வருவதே இச்சிலுவைப் பாடலின் அழகாகும்.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
24.11.2019

jeudi 21 novembre 2019

சிலுவைச் சித்திர கவிதை


சிலுவை ஓவியக் கவிதை
  
வானரசே வாராய்!
வஞ்சி விருத்தம் [மா+மா+காய்]
  
வானே! கோனே.. வா!பாரே!
தேனே! தேரே! பாவா..வா!
கானே! கா!வா வாகே..நீ
தானே சீரே தருவாயே!
  
அருஞ்சொற்பொருள்
  
கோன் - அரசன்
பார் - உலகம்
பாவன் - கவிஞன்
கான் - மணம்
வாகு - ஒளி
  
கருத்துரை
  
வானாகத் திகழ்கின்ற இறைவனே, எங்கள் அரசனே, வாராய்! புவியாய்ச் சுழல்பவனே, தேனாய் இனிப்பவனே, தேரழகு கொண்டவனே, உயிர்களின் வாழ்வைத் தீட்டும் பாவலனே, வாராய்! பூஞ்சோலையாய் மணப்பவனே, என்னைக் காப்பாய்! இருளீக்கும் பேரோளியே, வாராய்! நான் கேட்கும் முன்னே என் மனமறிந்து வாழ்வோங்கும் சீரைத் தருவாய்!
  
இவ்வஞ்சி விருத்தம் 29 எழுத்துகளைப் பெறும். சிலுவை ஓவியம் 20 எழுத்துக்களைப் பெறும். இஃது, இடப்பக்க முனையில் தொடங்கி, வடப்பக்க முனையை அடைந்து, சென்ற வழியே திரும்பி, மையம் அடைந்து மேலேறி முனையடைந்து, அங்கிருந்து சிலுவையின் அடியடைந்து பாடல் நிறைவுறும்.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
20.11.2019

mercredi 20 novembre 2019

சிலுவைச் சித்திர கவி


சிலுவை ஓவியக்கவிதை
[குறள் வெண்பா]
  
கண்ணீர்மண் காண்!புண்காண்! மன்மன மன்மதி!
எந்நீர் கழுவு[ம்] இனி?
  
மன் - இழிவு
  
கண்ணீர் மழையில் நனைந்த நிலத்தைக் காண்க. ஆறாத புண்ணைக் கொண்ட உளத்தைக் காண்க. கழிந்த மனத்தை, இழிந்த மதியை எந்நீராலும் இனிக் கழுவ முடியா.
  
இக்குறள் வெண்பா 29 எழுத்துகளைப் பெறும். சிலுவை ஓவியம் 20 எழுத்துக்களைப் பெறும். இஃது, இடப்பக்க முனையில் தொடங்கி, வடப்பக்க முனையை அடைந்து, வந்த வழியே திரும்பி, மையம் அடைந்து மேலேறி முனையடைந்து, அங்கிருந்து சிலுவையின் அடியடைந்து பாடல் நிறைவுறும்.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
19.11.2019

mardi 19 novembre 2019

சிலுவை ஓவியக்கவிதை


சிலுவை ஓவியக்கவிதை
[குறள் வெண்பா]
  
சிந்தை யுருகுமே! சீர்மை சுடருமே!
எந்தை யடிக்கே[து] இணை?
  
சிலுவை வரைபடத்தில் அமையும் இக்குறள் 23 எழுத்துகளைப் பெறும். குறளின் 5 ஆம் எழுத்தும் 13 ஆம் எழுத்தும் ஒன்றி வரும்.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
19.11.2019