சிலுவை ஓவியக்கவிதை
[குறள் வெண்பா]
கண்ணீர்மண் காண்!புண்காண்! மன்மன மன்மதி!
எந்நீர் கழுவு[ம்] இனி?
மன் - இழிவு
கண்ணீர் மழையில் நனைந்த நிலத்தைக் காண்க. ஆறாத புண்ணைக் கொண்ட உளத்தைக் காண்க. கழிந்த மனத்தை, இழிந்த மதியை எந்நீராலும் இனிக் கழுவ முடியா.
இக்குறள் வெண்பா 29 எழுத்துகளைப் பெறும். சிலுவை ஓவியம் 20 எழுத்துக்களைப் பெறும். இஃது, இடப்பக்க முனையில் தொடங்கி, வடப்பக்க முனையை அடைந்து, வந்த வழியே திரும்பி, மையம் அடைந்து மேலேறி முனையடைந்து, அங்கிருந்து சிலுவையின் அடியடைந்து பாடல் நிறைவுறும்.
பாட்டரசர் கி. பாரதிதாசன்
19.11.2019




