dimanche 17 novembre 2019

மாலை மாற்றும் சிவலிங்கமும்

மாலை மாற்று சிவலிங்க ஒவியக்கவிதை
  
1.
கண்கூட்டி டும்..வடிவாய்க் கார்கூட்டும் வாழ்வாய்க்..காப்
பண்படைக்க ஈசனை,மா வல்லையாய்த் - தண்ணொளியாய்த்
தங்க மொளிர்தகையாய் மண்காக்கும் பொங்கன்பாய்க்
கங்கைத் தலைவனைக் காட்டு!
  
2.
மேடுமிடு! கூர்வேன் மதிவிளை! மூலமே
தேடு! மிகவு யதிபுகழ் வாழ்க!
புதிய வுகமிடு! தேமேல மூளை
விதிமன்வேர் கூடுமிடு மே!
  
மாலையாக அமைந்துள்ள வெண்பா இடச்சுழியாகவும் வலச்சுழியாகவும் படிக்கலாம்.
    
அருஞ்சொற்பொருள்

வல்லை - வலிமை
மேடு - பெருமை
வேன் மதி - வேல் மதி
மூலம் - முதன்மை
மிகவு - மிகுதி
யதி - துறவி
உகம் - பூமி
தே - தெய்வம்
வேலவன் - அறிஞன்
விதி - உண்மை
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
17.11.2019

Aucun commentaire:

Enregistrer un commentaire