விருத்த மேடை - 82
கலிவிருத்தம் - 18
இயற்சீர் வெண்டளையால் அமைந்த விருத்தம்
[நேர் 11 எழுத்து - நிரை 12 எழுத்து]
ஒண்மைக் குணமே ஒளியை யளிக்கும்!
உண்மைக் குணமே உயர்வை யளிக்கும்!
எண்மைக் குணமே எழிலை யளிக்கும்!
வண்மைக் குணமே மகிழ்வை யளிக்கும்
[பாட்டரசர்]
கலிவிருத்தம் ஓரடியில் நான்கு சீர்களைப் பெறும். நான்கடிகள் ஓரெதுகையில் அமையும். ஒன்று மூன்றாம் சீர்களில் மோனை வரும்.
நேர் முன் நிரை, நிரை முன் நேர் இயற்சீர் வெண்டளையாம். இவ்விருத்தம் அடித்தோறும் இயற்சீர் வெண்டளை பெற்று வரும். ஒவ்வோர் அடியின் ஈற்றுச்சீர் மாச்சீராகும். நேரில் தொடங்கினால் 11 எழுத்துக்களும் நிரையில் தொடங்கினால் 12 எழுத்துக்களும் வரும். [ஒற்றுகளை நீக்கிக் கணக்கிட வேண்டும்]
இயற்சீர் வெண்டளையால் அமைந்த கலிவிருத்தம் ஒன்று விரும்பிய தலைப்பில் இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம், பிரான்சு
30.11.2022