samedi 9 novembre 2019

குதிரைச் சித்திர கவிதை


குதிரை ஓவியக்கவிதை
  
தலைக்கனம் ஏனோ?
[வஞ்சித்துறை] [காய் +
விளம்]
  
ஆடுவதோ? அழிவதோ?
ஓடுவதோ? வதைவதோ?
கேடுந்தே டுமுளமே!
சூடுஞ்சே டறிகவே!
  
சேடு - அழகு
  
கருத்துரை
  
தலைக்கனம் கொண்டு ஆடுகின்ற போக்கை எடுத்துரைத்துத் திருந்தி நல்வழி செல்லும் அழகைக் இவ்வஞ்சித்துறை வேண்டுகிறது.
  
செருக்குற்று ஆடுவதோ? தீயதை நாடி அழிவதோ? ஓடுவதோ? துயரடைவதோ? அழிவைத் தேடிச் செல்லும் மனமே, வாழ்வின் அழகை அறிகவே.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
07.11.2019

Aucun commentaire:

Enregistrer un commentaire