vendredi 6 septembre 2019

வெண்பா மேடை - 140   


வெண்பா மேடை - 140
  
19 எழுத்துக்களில் அமைந்த குறள்
  
தாயே! தகைமை தருவாயே! தாதூரே!
வாயே மணமுற வா!
 
விரும்பிய பொருளில் 19 எழுத்துக்களில் அமைந்த குறள் வெண்பா ஒன்றினைப் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்

இக்குறளில் ஒற்றும் விளங்காயும் வாரா. நேரில் தொடங்கினால் 19 எழுத்துக்களை நிரையில் தொடங்கினால் 20 எழுத்துக்களை இக்குறள் பெறும்.
  
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து குறள்வெண்பாவைத் தனிப்பதிவாகப் பதிவிட வேண்டுகிறேன்!
  
அன்புடன்
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
நிறுவுநர்
கம்பன் கழகம் பிரான்சு
தலைவர்
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
05.09.2019

Aucun commentaire:

Enregistrer un commentaire