mardi 23 janvier 2018

விருத்த மேடை - 8

விருத்த மேடை - 8
  
அறுசீர் விருத்தம் - 8
[மா + மா + மா + மா + மா + மாங்காய்]
  
உடலினை உறுதி செய்!
  
உடலும் உயிரும் உறுதி ஏற்க
   உழைத்து வாழ்வோமே!
குடலும் பெருகக் குந்தி உண்ணக்
   குலைந்து தாழ்வோமே!
மடலும் மதுவும் மணக்கும் தமிழை
   வடித்து மகிழ்வோமே!
சுடரும் வண்ணத் துாய நெறியைச்
   சுவைத்துப் புகழ்வோமே!
  
ஓரடியில் முதல் ஐந்து சீர்கள் மாச்சீர்களாகவும், ஆறாம் சீர் மாங்காய்ச் சீராக வரவேண்டும். இவ்வாறு நான்கடிகளும் அமைய வேண்டும். நான்கடிகளும் ஓரெதுகை பெற்றிருக்க வேண்டும். ஒன்று, ஐந்தாம் சீர்களில் மோனை அமைய வேண்டும்.
  
ஆத்திசூடி நுாலில் உள்ள ஓரடியைத் தலைப்பாகக் கொண்டு இவ்வகை அறுசீர் விருத்தம் ஒன்றைப் பாடுமாறு பாவலர்களை அன்புடன் வேண்டுகிறேன்.
      
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து தங்கள் வெண்பாவைப் பதிவிட வேண்டுகிறேன்!
       
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
22.01.2018

Aucun commentaire:

Enregistrer un commentaire