lundi 10 juin 2019

திருமாலின் தோற்றம்


வெண்பாவின் முதல் ஏழுசீர்களில் திருமாலின் தோற்றம்
  
மீனாமை ஏனமரி மின்குறள் கோடரியன்
வானம்பன் மாராமன் கண்கற்கி - தேனாகி
என்பாட்டில் வந்த இறையவனை, நெஞ்சமெனும்
பொன்னேட்டில் இட்டேன் பொலிந்து!
  
மீன் - மச்சம்
ஆமை - கூர்மம்
ஏனம் - வராகம்
அரி - சிங்கம்
குறள் - வாமனன்
கோடரியன் - கோடரியை ஏந்திய பரசுராமன்
வானம்பன் - வலிமையுடைய வில்லம்பை உடைய இராமன்
மாராமன் - கண்ணனுக்கு அண்ணனாகிய பலராமன்
கண் - கண்ணன்
கற்கி - குதிரை முகமுடைய தோற்றம்
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
10.06.2019

Aucun commentaire:

Enregistrer un commentaire