jeudi 1 mars 2018

ஓவியக் கவிதை

ஓவியக் கவிதை
  
ஆறாரைச் சக்கரம்
[கட்டளைக் கலித்துறை]
  
பாடுவாய் பாரதி பாக்களை நெஞ்சார மாவுலகே!
நாடுக நுட்பமே! சூடுக நன்மையே சங்கமென!
தேடுக பாடம் சிறக்க! வளமையின் தேனுறவே!
பாடுக நாளுமே! தேவியே கேட்பன பண்வேதமே!
  
இச்செய்யுள் ஆறாரைச் சக்கரத்தில் அமையும்போது நடுவே 'க' என்னும் எழுத்து நிற்க, ஆறு ஆரங்களிலும் முறையே ஒன்பது எழுத்துகள் அமைவதைக் காணலாம். ஆரங்களிலுள்ள நடுவெழுத்தை வலஞ்சுழியாகப் படிக்க, 'பாட்டரசன்' என்னும் சொல் பெறப்படுவதைக் காணலாம்.
  
இச்செய்யுளின் முதன் மூன்றடிகள் 19 எழுத்துகளைப் பெற்றும், ஈற்றடி 18 எழுத்துகளை பெற்றும் வரும். மொத்தம் 75 எழுத்துகளில் அமையும் இப்பாடல் சித்திரத்தில் 67 எழுத்துகளைப் பெறும்.
  
கட்டளைக் கலித்துறையின் கணக்கின்படி ஒற்று நீக்கி எண்ணிட ஒவ்வொரு அடியும் 16 எழுத்துகளைப் பெற்றிருக்கும்.

பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
01.03.2018

Aucun commentaire:

Enregistrer un commentaire