lundi 18 décembre 2017

நான்காரைச் சக்கரம் 2




சித்திர கவிதை
நான்காரை சக்கரம்

வாடி தேன்பா நாடி..வா!
வாடி நாளும் பாடி..வா!
வாடி பார்வை யாடி..வா
வாடி யாழ்..நீ தேடி..வா

இது நான்கு ஆராய், நடுவே வா என்னும் எழுத்து நிற்க, ஆர்மேல் ஒவ்வொரு எழுத்து நிற்க, வட்டையின் மேல் பன்னிரண்டு எழுத்துக்கள் நிற்கப் பாடப்படும் கவியாகும்.

முப்பத்திரண்டு எழுத்துகளை உடைய இச்செய்யுள், நான்காரைச் சக்கரத்தில் அமைக்குங்கால் முப்பத்திரண்டு எழுத்துகள் பதினேழாகச் சுருங்கும்.

நடுக் குறட்டினின்ற வா என்னும் எழுத்து, எட்டுமுறை படிக்கப்பட்டு எட்டு எழுத்தாகும். ஆரையில் நின்ற எட்டு எழுத்துக்களும் இரு முறை படிக்கப்பட்டுப் பதினாறு எழுத்துக்களாகும். சுற்று வட்டத்தில் உள்ள எழுத்துக்கள் எட்டு.  ஆக எழுத்துக்கள் முப்பத்திரண்டும் பதினாறாக அடங்கும். 

பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
18.12.2017

1 commentaire: