jeudi 21 décembre 2017

ஆறாரைச் சக்கரம் - 2




சித்திர கவிதை

ஆறாரைச் சக்கரம் - 2

தாயே துணை!
[கட்டளைக் கலித்துறை]

சுற்றித் திரிகின்றோம் தாயே,யே கும்வழி துன்பணிந்தே!
முற்றி மனத்துக்குள் தீயே,யே தும்சொல்லா மூண்டெரியும்!
பற்றி மெமைக்காப்பாய் நீ!யேணைப் பிள்ளை பசியறிவாய்!
சுற்றும்முன் பாவ பழிவந்தே! கண்ணெம்மேல் துய்தருளே!

இச்செய்யுள் ஆறாரைச் சக்கரத்தில் அமையும்போது நடுவே யே என்னும் எழுத்து நிற்ப, ஆர்மேல் ஒன்பதொன்பது எழுத்தாய்க் குறட்டின்மேல் தாயே நீயே துணை என்ற சொற்கள் தோன்றச் சுற்று வட்டத்தில்  இருபத்து நான்கு எழுத்துகள் நின்று நிறைவுறும்.

செய்யுளில் வரும் 93 எழுத்துகள் சித்திரத்தில்  85 ஆக அமையும்.

பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
21.12.2017

Aucun commentaire:

Enregistrer un commentaire