vendredi 23 octobre 2020

வெண்பா மேடை - 194

 


 வெண்பா மேடை - 194

இட்டமுடன் என்தலையில் இன்னபடி என்றெழுதி

விட்டசிவ னும்செத்து விட்டானோ? - முட்டமுட்டப்

பஞ்சமே யானாலும் பாரம்அவ னுக்கன்னாய்!

நெஞ்சமே யஞ்சாதே நீ!

 

[ஓளவையார் தனிப்பாடல்கள்]

பொல்லார் புழுத்திடலாம்! பொய்யார் கொழுத்திடலாம்!

அல்லார் நிலைமை அழுத்திடலாம்! - தொல்லுலகை

வஞ்சமே கூடி வதைத்திடலாம்! போர்தொடுக்க

நெஞ்சமே யஞ்சாதே நீ!

 

அல் - இருள்

அல்லார் - இருள் ஆழ்கின்ற

 

[பாட்டரசர் கி. பாரதிதாசன்]

 

" நெஞ்சமே யஞ்சாதே நீ" ஈற்றடி அமையும் வண்ணம் நேரிசை வெண்பா ஒன்று பாடுக.

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

தலைவர்

கம்பன் கழகம் பிரான்சு

தொல்காப்பியர் கழகம் பிரான்சு

23.10.2020

Aucun commentaire:

Enregistrer un commentaire