vendredi 28 août 2020

வெண்பா மேடை - 183

வெண்பா மேடை - 183

படிக நிறமும் பவளச்செவ் வாயும்
கடிகமழ்பூந் தாமரைபோல் கையும் - துடியிடையும்
அல்லும் பகலும் அனவரத மும்துதித்தால்
கல்லும்சொல் லாதோ கவி! 
  
[சரசுவதி அந்தாதி]
  
வெல்லும் விழியுடையாள்! வெள்ளை யுளமுடையாள்!
சொல்லும் சுவையுடையாள்! தொன்மொழியாள்! - மல்லிகையாள்!
செல்லுமிடம் சீருடையாள்! செந்தமிழாள்! என்..மனக்
கல்லும்சொல் லாதோ கவி!
  
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
"கல்லும்சொல் லாதோ கவி" என ஈற்றடி அமையும் வண்ணம் நேரிசை வெண்பா ஒன்று பாடுக.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
07.08.2020

Aucun commentaire:

Enregistrer un commentaire